உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்காவிட்டால் ஒரு தமிழனின் வீட்டிலும் உலை கொதிக்காது என்பதுபோல கருணாநிதியும் அவரது குடும்பமும் கட்சியும் தமிழ்நாட்டை அதகளப்படுத்திக் கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இந்த மாநாட்டிற்கு வாழ்த்துத் தெரிவித்து ரூபன் என்பவர் பெயரில் விடுதலைப்புலிகள் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டிருப்பதாக தெரிகிறது. இனியொரு, ஈழநேசன் போன்ற இணையதளங்களில் இதுபற்றி விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. ரூபனின் அந்த அறிக்கைக்கு நன்றி தெரிவித்து கருணாநிதி வெளியிட்ட அறிக்கை, செய்தி குறிப்பு எண்-74 என தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் இயக்குநரால் 20.06.2010 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
மேலும்...
No comments:
Post a Comment
உரையாடல்கள்