Thursday, July 22, 2010

சாதிவாரிக் கணக்கெடுப்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அரசியல்:ஒரு சுருக்கமான வரலாறு - அ. மார்க்ஸ்

"ஏற்கனவே உள்ள ஒரு உண்மையைப் பதிவு செய்வதுதானே மக்கள் தொகைக் கணக்கீடு" என 1931ம் ஆண்டுக் கணக்கெடுப்பு ஆணையராக இருந்த ஹட்டன் கூறியது முழு உண்மையன்று. ஒருவகையில் அது ஏற்கனவே உள்ள உண்மைகளைப் பதிவு செய்வதுதான் என்றபோதிலும் இன்னொரு வகையில் அது புதிய உண்மைகளை உருவாக்குவதாகவும் புதிய அடையாளங்களைத் தோற்றுவிப்பதாகவும் உள்ளது. யார் இந்தக் கணக்கெடுப்பைத் தீர்மானிக்கிறார்களோ அவர்களின அரசியல் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்த அரசியலுக்கிணங்கவே கணக்கெடுப்புப் படிவம் உருவாக்கப்படுகிறது. கேள்விகள் வடிவமைக்கப்படுகின்றன. பதிலளிப்பவரின் தேர்வுகள் குறுக்கப்படுகின்றன. சில நேரங்களில் விசாலமாக்கவும் படுகின்றன. 

மேலும்...

No comments:

Post a Comment

உரையாடல்கள்